search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மேம்பால சுவர்"

    ரெயில்வே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னிமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு நூல் கோன்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.

    லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். மாற்று டிரைவர் அய்யன்துரை (37) என்பவரும் லாரியில் இருந்தார்.

    இந்த லாரி சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே நள்ளிரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தது. அங்கு குறுகிய ரெயில்வே மேம்பாலம் இருப்பது தெரியாமல் இயக்கப்பட்டதால் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    மற்றொரு டிரைவரான அய்யன்துரைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேம்பால சுவரில் மோதியதால் லாரியின் முன் சக்கரங்கள் தனியே துண்டிக்கப்பட்டன.

    அதனால் வேறு லாரியில் நூல் கோன்கள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×